Tuesday, April 28, 2020

என் (கவிப்)பயணம்

காகிதத்தில் கிருகினேன்,
கவிதைகள் பல எழுதினேன்.
காகிதங்கள் கடந்துவிடும்,
கவிதைகள் நம்மோடு கலந்துவிடும்.
காதல் வந்தால் கவிதை வரும்,
கொஞ்சம் காத்திருந்தால் கவிதை பொங்கும்.
முதல் கவிதை தேர்வு தாளில்,
தொடரும் நான் வாழும் நாளில்.

ரம்யமாய் கவிதை வேண்டி,
அட்சயா பாடி ஆட அதுதொடர,
சோகமும், சோர்வும், 
பழியும், பாவமும் கடந்து
வருவேன் எழுவேன்,
பாசமும், பறிவும், 
ஊக்கமும், உண்மையும்,
தேக்கமும், தெளிவும்,
வருமா‌ வருமா என பறக்க நினைத்து,
மறத்துப்போன கவிதையாக,
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்,
என் தம்பி எனும் படைக்காக்க,
என் தன்னம்பிக்கை உயிர்பெற்று உயர,
மோலு எனும் மேலுலக தேவதை,
விண்ணிலிருந்து வந்து விதி மாற்றி,
என்னிலிருந்து எனை மாற்றினால்.

(தன்யா) தனியாய் புரிந்தது பலர் பாசம்,
பெரிதாய் தெரிந்தது பலர் தியாகம்,
பதினெட்டாம் படிக்காரன் படியளக்க,
பதினெட்டை பெற்று பழையதை பாதுகாக்க,
பதினெட்டில் கிடைத்த பக்குவ பைங்கிளி,
அமைதியாய் ஆனால் அம்முவாய்.

தொடர்கிறது கவிதை,
கரோனா கொடுத்த விடுப்பு
கற்று தரும் உலகில் பல பொறுப்பு.

-இராமகுரு ராதாகிருஷ்ணன்

Friday, April 24, 2020

மகளாய் பிறப்பாய்!!!

மகளாய் பிறப்பாய், 
என் பெண்ணே உன்னைகாண.
மகளாய் பிறப்பாய், 
உன் புன்னகையில் பசியாற.
மகளாய் பிறப்பாய், 
என் மடியில் நீ உறங்கிட. 
மகளாய் பிறப்பாய், 
உன் மழலை சொல் கேட்டிட. 
மகளாய் பிறப்பாய், 
உன்னை என் மார்பில் வளர்த்திட.
மகளாய் பிறப்பாய், 
உன் பள்ளிப்பாடம் கேட்டிட.
மகளாய் பிறப்பாய், 
என் சாதனைகளுக்கு சாட்சியாய்.
மகளாய் பிறப்பாய், 
நீ பெண்ணாய் பூத்திட.
மகளாய் பிறப்பாய், 
உன்னை மனமேடையில்  ஆசிர்வதிக்க.
மகளாய் பிறப்பாய்,
நம் மனதோடு பேசிட.
மகளாய் பிறப்பாய், 
உன் குழந்தைகளை கொஞ்சிட.
மகளாய் பிறப்பாய்,
உன்னை சாதனை மங்கையாய் காண.
மகளாய் பிறப்பாய், 
எனக்கு இரு சொட்டு கண்ணீர்விட. 
மகளாய் பிறப்பாய், 
உன் மகனாக நான் பிறக்க. 
மகளாய் பிறப்பாய் மகளே!!!! 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Tuesday, April 14, 2020

நான் இருக்கிறேன்

நான் இருக்கிறேன் 
உன்னை சுமந்து உலகை சுற்றிவர 

நான் இருக்கிறேன்
சுற்றிவரும் உலகை உனக்கு சொந்தமாக

நான் இருக்கிறேன்
சொந்தங்கள் உன்னை சோர்வுற செய்தாலும்

நான் இருக்கிறேன்
சோர்வுற்ற உன்னை சிரிப்பூட்ட எழவைக்க 

நான் இருக்கிறேன்
ஏழ நினைக்கும் உனக்கு ஏணியாய்

நான் இருக்கிறேன்
ஏணிகளை கடந்து சாதனைகள் செய்திட 

நான் இருக்கிறேன்
சாதனைகளும் சர்வ சாதாரனமென நீ உறக்கசொல்ல !!! 

நான் இருக்கிறேன்....

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

நாயர் சாரே

ஞாயிறாய் இருந்த நாயர் சாரே,
எங்கள் ஞான குருவே நாயர் சாரே,
பிள்ளைப்போல் பார்த்தாய் நாயர் சாரே,
காட்டிய வழியே சென்றோம் நாயர் சாரே,
வழி எங்கும் துணைநின்றாய் நாயர் சாரே,
விழி நீரை துடைத்திட்டாய் நாயர் சாரே, 
வாழ்க்கையை கற்றுத் தந்தாய் நாயர் சாரே, 
பலர் இன்று வாழ்வதும் உன்னாலே நாயர் சாரே, 
பெற்ற பேரெல்லாம் உனதாகும் நாயர் சாரே, 
எங்களை விட்டு எங்கு சென்றாய் நாயர் சாரே, 
ஏக்கங்கள் தீரவில்லை நாயர் சாரே,
என்றாவது நீ வருவாயா நாயர் சாரே??? 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Sunday, April 12, 2020

பதினெட்டு - ஈரொன்பது

பதினெட்டாம் படித்தொட்டு
பதினெட்டை நான் பாட,
பதினெண் கீழ்க்கணக்கில் பாடினார் பெரும்புலவர்.
பதினெண்யென்றால் ஜெயா (ஜெயம்),
பதினெட்டை கொண்ட
பதினெட்டு காலயுத்ததை
பதினெட்டாய் பாடினார் புலவர்.
பதினெட்டே நம்மேனி,
பதினெட்டு மலையாளும் 
பதினெட்டு சித்தர்கள் அருள
பதினெட்டை நான் பெற்றேன்
பதினெட்டில் நீ பிறந்ததாலோ !!!   

- இராமகுரு ராதாகிருஷ்ணன் 

Saturday, April 11, 2020

ஆராரோ ஆரிரரோ

என் பிள்ளை கண்ணுறங்க ஆராரோ 
என் பாட்டுக்கு கண்ணுறங்க ஆராரோ 
நாளையும் நமதேன்று ஆராரோ
நல்ல நாளும் நமதேன்று ஆராரோ
கவலைகள் மறந்துறங்க ஆராரோ
கனவுகள் கண்டுறங்க ஆராரோ 
வலிகளை மறந்துறங்க ஆராரோ
வழியொன்று வருமென்றுறங்க ஆராரோ
சிறுப்பிள்ளைபோல் சிரித்துறங்க ஆராரோ
உலகம் உனதென்றுறங்க ஆராரோ
செல்வங்கள் பெரிதல்ல ஆராரோ
சேர்க்கும் சொந்தங்களே ஆராரோ
நான் இருக்க நீயுறங்க ஆராரோ
நீ இல்லாமல் நானெங்கு போவேனோ?! 

போனது போகட்டும் ஆரிரரோ 
என்றும் போர் குணம் வேண்டாம் ஆரிரரோ
வாழ்வதும் ஓர் வாழ்கை ஆரிரரோ
பிறர் வாழ விழலாம் ஆரிரரோ
சொத்துன்ன சுகமேன்ன ஆரிரரோ
சிரிப்புக்கு விலையுண்டா ஆரிரரோ
சித்திரம் பேசுமடீ ஆரிரரோ
என் சித்திரம் நீதானே ஆரிரரோ
பக்குவம் வேண்டுமடீ ஆரிரரோ
பாதுகாக்க பழகிக்கொள் ஆரிரரோ
சிக்கனம் சிறுமையல்ல ஆரிரரோ
சிந்திக்க மறக்காதே ஆரிரரோ
நீ இருக்க நானுறங்க ஆரிரரோ
நான் இருக்க நீ எங்கும் போவாயோ? 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Tuesday, April 7, 2020

நாயர் சார்

சிந்திக்க கற்றுதந்தாய்
சிறகடித்துப் பறக்க சொல்லித்தந்தாய்,
எண்ணங்களே உயர்வுயென்றாய்,
கற்றதை கற்பிக்க சொன்னாய், 
கற்பித்தலும் கற்றலாகுமேன உணர்தினாய்,
வாடி நின்ற போது, வாசல் வந்தாய், 
தேடி நின்றோர்க்கு தோல்களை தந்தாய்.


- இராமகுரு ராதாகிருஷ்ணன் 

Monday, April 6, 2020

தனி-யா ?

உன் பாசம் எனக்கு புரியாமல் இல்லை,
என் பாசம் உனக்கு கிடைகாமலும் இல்லை

அப்போது இருந்து எனக்கு,
இப்போது போல், உன்னிடம்
பாசத்தை காட்ட தெரியவில்லை!!!

இப்போது இருக்கும் உனக்கோ
அப்போது போல், என்னிடம்
பாசத்தை காட்ட விருப்பமில்லை!!!

நீ துடைத்த என் கண்ணாடிக்கும்,
நான் தந்து 
நீ அணிந்திருந்த அந்த சங்கிலிக்கும், 
நம் பாசம்
தெரியும்,
புரியும்,

நான் தனி-யா?
உன் நினைவுகள் உள்ளவரை தனி இல்லை
என் தன்யா !!! 

- இராமகுரு ராதாகிருஷ்ணன் 

அண்ணாவின் அம்மூ

 பலருக்கு நான் மற்றுமொரு அண்ணன்,
 பாடும் உனக்கோ நான் ஒரே அண்ணன்.
 உணவுகளால் இணைந்த நம் உறவு,
 உணர்வுகளால் இன்று வளர்ந்த உறவு.
 "சாப்டேன் , நீ சாப்டியா?", என்று
 நீ கேட்காமல் கழிவதில்லை பொழுதும்,
 உன்னிடம் நான் செய்வதை சொல்லாமல்,
 இருந்ததில்லை ஒரு பொழுதும்.
 பிறருக்கோ நீ என் தங்கை - இந்தக் கவி
 பாடும் எனக்குத்தான் தெரியும் நீ "என் மகளேன்று"!!!

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

 

Wednesday, April 1, 2020

அம்மூ


அமைதியான அழகி
ஆடம்பரமில்லா அசல்
இயல்பான இனியாள்
ஈடுயில்லா இயற்கையாள் 
உண்மையான உறுதுணை
ஊக்க மருந்தானா உனக்கு
என்றும்
ஏறுமுகமே 
ஐயமில்லா அதிர்ஷ்டகாரி 
ஒப்பில்லா நீ
ஓட்டம் நிற்காமல் ஒளிர்வாய் 
ஔவை துணை நிற்பாள்
அம் மூ 
அஹ அஹ !!!!!

- அண்ணா (இராமகுரு ராதாகிருஷ்ணன்)