Showing posts with label Sister. Show all posts
Showing posts with label Sister. Show all posts

Friday, July 31, 2020

DD

Days have passeD.
Dear, love for you stayeD.
Didn't imagine this quick a enD.
Did you think about your loveD,
Definitely not, oh my dear sister... DD,
Day you tied sacred threaD (during my board exam),
Day I hit you on your heaD (during your board exam), 
Days that made us - DD,
Did you remember Sir's worD?
Definitely not, oh my dear little girl....DD.

Dear DD, come back D!!!!!! 

- DaiAnna 

Sunday, April 12, 2020

பதினெட்டு - ஈரொன்பது

பதினெட்டாம் படித்தொட்டு
பதினெட்டை நான் பாட,
பதினெண் கீழ்க்கணக்கில் பாடினார் பெரும்புலவர்.
பதினெண்யென்றால் ஜெயா (ஜெயம்),
பதினெட்டை கொண்ட
பதினெட்டு காலயுத்ததை
பதினெட்டாய் பாடினார் புலவர்.
பதினெட்டே நம்மேனி,
பதினெட்டு மலையாளும் 
பதினெட்டு சித்தர்கள் அருள
பதினெட்டை நான் பெற்றேன்
பதினெட்டில் நீ பிறந்ததாலோ !!!   

- இராமகுரு ராதாகிருஷ்ணன் 

Saturday, April 11, 2020

ஆராரோ ஆரிரரோ

என் பிள்ளை கண்ணுறங்க ஆராரோ 
என் பாட்டுக்கு கண்ணுறங்க ஆராரோ 
நாளையும் நமதேன்று ஆராரோ
நல்ல நாளும் நமதேன்று ஆராரோ
கவலைகள் மறந்துறங்க ஆராரோ
கனவுகள் கண்டுறங்க ஆராரோ 
வலிகளை மறந்துறங்க ஆராரோ
வழியொன்று வருமென்றுறங்க ஆராரோ
சிறுப்பிள்ளைபோல் சிரித்துறங்க ஆராரோ
உலகம் உனதென்றுறங்க ஆராரோ
செல்வங்கள் பெரிதல்ல ஆராரோ
சேர்க்கும் சொந்தங்களே ஆராரோ
நான் இருக்க நீயுறங்க ஆராரோ
நீ இல்லாமல் நானெங்கு போவேனோ?! 

போனது போகட்டும் ஆரிரரோ 
என்றும் போர் குணம் வேண்டாம் ஆரிரரோ
வாழ்வதும் ஓர் வாழ்கை ஆரிரரோ
பிறர் வாழ விழலாம் ஆரிரரோ
சொத்துன்ன சுகமேன்ன ஆரிரரோ
சிரிப்புக்கு விலையுண்டா ஆரிரரோ
சித்திரம் பேசுமடீ ஆரிரரோ
என் சித்திரம் நீதானே ஆரிரரோ
பக்குவம் வேண்டுமடீ ஆரிரரோ
பாதுகாக்க பழகிக்கொள் ஆரிரரோ
சிக்கனம் சிறுமையல்ல ஆரிரரோ
சிந்திக்க மறக்காதே ஆரிரரோ
நீ இருக்க நானுறங்க ஆரிரரோ
நான் இருக்க நீ எங்கும் போவாயோ? 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Monday, April 6, 2020

தனி-யா ?

உன் பாசம் எனக்கு புரியாமல் இல்லை,
என் பாசம் உனக்கு கிடைகாமலும் இல்லை

அப்போது இருந்து எனக்கு,
இப்போது போல், உன்னிடம்
பாசத்தை காட்ட தெரியவில்லை!!!

இப்போது இருக்கும் உனக்கோ
அப்போது போல், என்னிடம்
பாசத்தை காட்ட விருப்பமில்லை!!!

நீ துடைத்த என் கண்ணாடிக்கும்,
நான் தந்து 
நீ அணிந்திருந்த அந்த சங்கிலிக்கும், 
நம் பாசம்
தெரியும்,
புரியும்,

நான் தனி-யா?
உன் நினைவுகள் உள்ளவரை தனி இல்லை
என் தன்யா !!! 

- இராமகுரு ராதாகிருஷ்ணன் 

அண்ணாவின் அம்மூ

 பலருக்கு நான் மற்றுமொரு அண்ணன்,
 பாடும் உனக்கோ நான் ஒரே அண்ணன்.
 உணவுகளால் இணைந்த நம் உறவு,
 உணர்வுகளால் இன்று வளர்ந்த உறவு.
 "சாப்டேன் , நீ சாப்டியா?", என்று
 நீ கேட்காமல் கழிவதில்லை பொழுதும்,
 உன்னிடம் நான் செய்வதை சொல்லாமல்,
 இருந்ததில்லை ஒரு பொழுதும்.
 பிறருக்கோ நீ என் தங்கை - இந்தக் கவி
 பாடும் எனக்குத்தான் தெரியும் நீ "என் மகளேன்று"!!!

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

 

Wednesday, April 1, 2020

அம்மூ


அமைதியான அழகி
ஆடம்பரமில்லா அசல்
இயல்பான இனியாள்
ஈடுயில்லா இயற்கையாள் 
உண்மையான உறுதுணை
ஊக்க மருந்தானா உனக்கு
என்றும்
ஏறுமுகமே 
ஐயமில்லா அதிர்ஷ்டகாரி 
ஒப்பில்லா நீ
ஓட்டம் நிற்காமல் ஒளிர்வாய் 
ஔவை துணை நிற்பாள்
அம் மூ 
அஹ அஹ !!!!!

- அண்ணா (இராமகுரு ராதாகிருஷ்ணன்)

Wednesday, April 12, 2017

என் தங்கை

எங்கிறந்தோ வந்தால் - என் வாழ்வில்,
ஏணியாய் இன்று,
என் கனவை சுமக்கும்
தாயாய் இன்று,
கவலைகளை காற்றாய்
கருணையை ஊற்றாய்
அளவற்ற அன்பை ஆறுபோல்
குறைவற்ற குனவதியாய்
பிரியமுடன்
த்தீ.

- இராமகுரு ராதாகிருஷ்ணன்