Monday, January 27, 2014

வழிகாட்டி(ய) பயணம்




ஒரு நாள் "மேட்டுபாளையம் - கோவை" செல்லும் பேருந்தில் ஏறினேன்.  கோவையில் வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்ல பேருந்தில் அமர இடம் இல்லாமல் ஒரு தூண் போன்ற கம்பியை அனைத்தவாறு  நின்றேன். பேருந்து காரமடையை நெருங்கும் போது, கூட்ட நெரிசல் அதிகரித்தது. நான் நின்று கொண்டு இருந்த இடமருகில் இருக்கையில் அமர்த்திருந்த  இளம்பெண்கள் அவர்கள் வயதுக்குரிய பொலிவு, சிரிப்பு, பேச்சு என்று தங்கள் பயணத்தை ரசித்துகொண்டபடி இருந்தனர். ஓட்டுனர் வேகத்தடை மிதியை ஒரு முறைக்கு இரு முறை வேகமாய் உதைக்க, நின்றிருந்த அனைவரும் முன்னுக்கும் பின்னுக்கும் நடனம் ஆடியவாறு அசைந்தனர்.

என் நடனத்தை கண்ட அந்த பெண்கள், "தம்பி என் மடில உக்காந்துக்கோ" என்று ஒரு பரிவோடு கூற. "இல்ல பரவால" என்று நான் சொல்லி முடிக்கும் முன், என் கைகளை பிடித்தார் ஒருவர். நானும் ஒருவர் மடியில் அமர்ந்தேன்.  அதன் பின்னர், இருவரும் தங்கள் கல்லூரி பாடம், கல்லூரி அனுபவங்களை பற்றி பேசியவாறு இடையில் என் கன்னத்தை கில்லுவது, கால் வலிக்கும் போது, இன்னொருவர் மடியில் மாற்றிவிடுவது என்று மணித்துளிகள் ஓடின.

காந்திபுரம் பேருந்து நிலையத்தை அடைய சற்று நேரம் இருக்கும் பொழுது, இரு பெண்களும் தங்கள் பாட தலைப்பு ஒன்றை பற்றி விவாதம் செய்து கொண்டுருந்தனர். அந்த பேச்சில் இருந்து அவர்கள் பள்ளி முடித்து கல்லூரியில் சற்றே சேர்ந்து உள்ளனர் என்பது திண்ணம். அவர்கள் வாதத்தின் இடையில் நான் "அக்கா அது நீங்க சொல்லற மாரி இல்ல, அது இப்படி" என்று என் கருத்தை நான் கூற. " 6th std ல இது எல்லாம் உனக்கு எப்படி தெரியும்" னு ஒரு பெண் என்னை  வினாவ. நானோ "ஐயோ அக்கா, நான் 10th முடிச்சுட்டு வழிகாட்டி நிகழ்ச்சிக்கு போறேன்" என்று பதிலுரைத்தேன்.

"முதல நீ என் மடில இருந்து எந்திரி ?!?!?!?

குறிப்பு  : இது உண்மை சம்பவம்

Saturday, January 18, 2014

மனம்

இருப்பதோ ஒரு மனம் 
இழந்தது பல மனம்
பிரிவது ஓர் உயிர்
பிரிந்தால் பல மைல்
புரிந்துகொண்ட மனமும் 
புரிந்துகொள்கிற குணமுமே என் உறவுகள் !
துடிப்பது இதயம் எம் 
வாழ்வில் தேவை புது உதயம் 
அனாதை மனதை 
ஆதரிக்கும் அன்பே 

அன்னை 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Thursday, January 16, 2014

வருவேன் எழுவேன் !

வழியென்று குழிக்குள் விழுந்தேன்
பாவமென்று சிலரும்
பரிதாபமென்று சிலரும்
குருடனென்று சிலரும்
அறிவிழந்தவனென்று சிலரும் கூற
கைகொடுத்து காப்பாற்ற மனமில்லை எவர்க்கும் !!!

குழிகள் பலவுண்டு
வழுக்கிவிழ வழிகளுண்டு
வார்தைகள்விழ வாய்களுண்டு

உணர்ந்தேன் இன்று,
தோள்கொடுக்க தோழனுண்டு
எழுந்துவர மனமுமுண்டு

விழுந்தவனுக்குதான் எழுவதன் கடினம் புரியும்
நீங்களும் விழலாம் , நான் இருக்கிறேன்
கைகொடுக்க !

வருவேன் எழுவேன் !

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Saturday, January 11, 2014

சான் ஜோஸ்

எங்கள் பள்ளி சான் ஜோஸ்
என்று சொல்லி சந்தோஸ்(ஷம்)
பள்ளிக்கு மேல் நீ (சான் ஜோஸ்) எங்களுக்கு
பிள்ளைகளாய் நாங்கள் உங்களுக்கு
அன்பை சேவையாய் செய்திட்ட நீங்கள்
சேவையை அன்பாய் செய்ய துடிக்கும் நாங்கள்
எவ்விடம் சென்றாலும் இவ்விடமிருந்தே சென்றது
அவ்விடம் இருந்தாலும் இவ்விடத்திற்கோ மனம் துடிக்குது

கடவுளை காட்டியது நீங்கள்
கல்வி கொடுத்தது நீங்கள்
கனவை காண்பித்தது நீங்கள்

ஊட்டி வளர்த்த பிள்ளையை
ஊர் மேச்ச உளமாற வாழ்த்தும் தாயாய்

வழிகாட்டும் குருவுக்கு மேலாய்
கை பிடித்து வழிநடத்தும் தந்தையாய்

நீங்கள் தந்தது சொல்லி மாளாது

நீங்கள் தந்தது இன்றி
எங்களிடம் இருப்பது நன்றி
மட்டுமே !!

 - இராமகுரு ராதாகிருஷ்ணன்