Showing posts with label Dhanya. Show all posts
Showing posts with label Dhanya. Show all posts

Tuesday, April 28, 2020

என் (கவிப்)பயணம்

காகிதத்தில் கிருகினேன்,
கவிதைகள் பல எழுதினேன்.
காகிதங்கள் கடந்துவிடும்,
கவிதைகள் நம்மோடு கலந்துவிடும்.
காதல் வந்தால் கவிதை வரும்,
கொஞ்சம் காத்திருந்தால் கவிதை பொங்கும்.
முதல் கவிதை தேர்வு தாளில்,
தொடரும் நான் வாழும் நாளில்.

ரம்யமாய் கவிதை வேண்டி,
அட்சயா பாடி ஆட அதுதொடர,
சோகமும், சோர்வும், 
பழியும், பாவமும் கடந்து
வருவேன் எழுவேன்,
பாசமும், பறிவும், 
ஊக்கமும், உண்மையும்,
தேக்கமும், தெளிவும்,
வருமா‌ வருமா என பறக்க நினைத்து,
மறத்துப்போன கவிதையாக,
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்,
என் தம்பி எனும் படைக்காக்க,
என் தன்னம்பிக்கை உயிர்பெற்று உயர,
மோலு எனும் மேலுலக தேவதை,
விண்ணிலிருந்து வந்து விதி மாற்றி,
என்னிலிருந்து எனை மாற்றினால்.

(தன்யா) தனியாய் புரிந்தது பலர் பாசம்,
பெரிதாய் தெரிந்தது பலர் தியாகம்,
பதினெட்டாம் படிக்காரன் படியளக்க,
பதினெட்டை பெற்று பழையதை பாதுகாக்க,
பதினெட்டில் கிடைத்த பக்குவ பைங்கிளி,
அமைதியாய் ஆனால் அம்முவாய்.

தொடர்கிறது கவிதை,
கரோனா கொடுத்த விடுப்பு
கற்று தரும் உலகில் பல பொறுப்பு.

-இராமகுரு ராதாகிருஷ்ணன்

Monday, April 6, 2020

தனி-யா ?

உன் பாசம் எனக்கு புரியாமல் இல்லை,
என் பாசம் உனக்கு கிடைகாமலும் இல்லை

அப்போது இருந்து எனக்கு,
இப்போது போல், உன்னிடம்
பாசத்தை காட்ட தெரியவில்லை!!!

இப்போது இருக்கும் உனக்கோ
அப்போது போல், என்னிடம்
பாசத்தை காட்ட விருப்பமில்லை!!!

நீ துடைத்த என் கண்ணாடிக்கும்,
நான் தந்து 
நீ அணிந்திருந்த அந்த சங்கிலிக்கும், 
நம் பாசம்
தெரியும்,
புரியும்,

நான் தனி-யா?
உன் நினைவுகள் உள்ளவரை தனி இல்லை
என் தன்யா !!! 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்