Showing posts with label pradeep. Show all posts
Showing posts with label pradeep. Show all posts

Sunday, December 11, 2011

Happy Birthday Bharathi - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - மகாகவி சுப்பரமணிய பாரதி


Dec 11, 2011 - 129th Birthday of the great Indian poet Subramanya Bharathi. Bharathi had an impact on everything the National Freedom, Social reforms,Women up liftment. His influence can be seen in Indian cinema, his poems composed into songs.


My favorite and lovable among his poems are:

வெள்ளை நிறத் தொரு பூனை-எங்கள்
வீடடில் வளருது கண்டீர்.
பிள்ளைகள் பெற்றதப் பூனை-அவை
பேருக்கொரு நிறமாகும்

poem we studied in primary school.

ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

 
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.


பொய்சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.


உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா. 

These are from "பாப்பாப் பாட்டு - Paapa Paattu" which says how a child be in childhood, various animals and their qualities.

My second memory poem in 6th Grade(not sure):

ஒளி படத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்கு வாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா
         

Above this, every Monday in open assembly after flag hoisting, we sing
தாயின் மணிக்கொடி பாரீர் -- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

 As told earlier Tamil movies by veteran Directors KB and Mani's Movies have actual poems as songs and songs influenced by his poems.


தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
       செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
       பாங்கியோ டென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
       மார்பு துடிக்கு தடீ!

பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
       பாவை தெரியு தடீ!

மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே
       வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா
       வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! - இந்த வையகம்
       மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்
       நரகத் துழலுவதோ?


from "வறுமையின்  நிறம்  சிவப்பு - Varumaiyin Niram Sivapu", where Kamal Haasan(in movie)(SPB) sings this wonderful verses.



 வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
  மார்பு துடிக்கு தடீ!

  
This same lines have used in another song from Kamal Haasan and Rajini Duo Movie by KB.


நல்லதோர் வீணை செய்தேஅதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ 
சொல்லடி சிவசக்தி
எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்

வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
நிலசுமையென வாழ்ந்திட புரிகுவையோ

விசையுறு பந்தினைப் போல்
உள்ளம் வேண்டியபடி
செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
நித்தம் நவமென சுடர் தரும் உயிர்கேட்டேன்

தசையினை தீச்சுடினும்
சிவசக்தியை பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ

from the same movie "வறுமையின்  நிறம்  சிவப்பு - Varumaiyin Niram Sivapu", where Kamal Haasan sings when he is tired of searching a dream job and being honest in all ways he do things.

Though movies were influenced by this  great men's work. Even before movies could, the poems wrote when facebook tags , shares, twitter tweets, Google buzzing weren't there reached people.




One such famous poem is 


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதித்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே.
இச்சகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

This poem says about the courage and state of being without fear when India was under British. 

"Even when the whole world is against us, 
No fear or no traces of fear.
Even people break us thinking we are least important
No fear or no traces of fear.
Though we live through eating what we get by begging
No fear or no traces of fear.
Though we lost all things we desired for
No fear or no traces of fear."

Tamilnadu, formerly know as Madras Presidency , in the below poem he would pin pointed out the versatility of செந்தமிழ் நாடு i.e., தமிழ் நாடு



செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே -            (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு            (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு.            (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு - செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு            (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு.            (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.            (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு.            (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக - மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன் கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.            (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யிடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.            (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.            (செந்தமிழ்)

During school days, I knew செல்லமா(Chellama) is Bharthi's wife, I wonder who is this கண்ணம்மா(Kannamma). கண்ணம்மா , is Lord Krishna(known as Kannan), Bharathi visualized Lord Kannan Child, Mother,Lover.




My two famous poem of கண்ணம்மா as child and கண்ணம்மா as lover.


Child - குழந்தை :

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
       செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
       ஏற்றம் புரிய வந்தாய்!       
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
       பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
       ஆடி வருந்தேனே!   

ஓடி வருகையில் - கண்ணம்மா
       உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
       ஆவி தழுவு தடீ!   

உச்சி தனை முகந்தால் - கருவம்
       ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
       மேனி சிலிர்க்கு தடீ!   

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
       கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
       உன்மத்த மாகு தடீ!   

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
       சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
       நெஞ்சம் பதைக்கு தடீ!   

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
       உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
       என்னுயிர் நின்ன தன்றோ?   

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
       துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
       மூர்க்கந் தவிர்த்திடு வாய்.   

இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்
       ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
       ஆகுமோர் தெய்வ முண்டோ?   

மார்பில் அணிவதற்கே -உன்னைப்போல்
       வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப் போல்
       செல்வம் பிறிது முண்டோ?       



 Lover -  காதலி              

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நக்ஷத் திரங்க ளடீ!                                 

சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ! - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.              

சாத்திரம் பேசு கிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ! - இதுபார்,
கன்னத்து முத்த மொன்று!                   

Last but not least, Bharathi know for his multi-linguistic person, expresses his love towards Tamil.

Tamil - தமிழ்
          

Bharathi
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல,
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!


பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

மகாகவி பாரதிக்கு சின்னதொரு பிறந்த நாள் பரிசு! by Arumuga Pradeep.
உள் ளம் கணன்றும் லட்ச்சியம்,
ஓங்கி வளரட்டும்...
வெடித்து சிதறட்டும்...
கனல்த் துளி தெரித்த இடமெல்லாம்,
... பற்றட்டும்....
பற்றிய படியே பரவட்டும்...
அனைக்க துடிப்பவையயும் தனதாக்கியபடி!
Translation: 
A tribute to the greatest poet, patriot and reformer- Mahakavi Barathi!
Let the dream within me ignite,
Let the ignited fire mass explode open,
Let flames scatter....dream seeds be dispersed,
Let it catch fire everywhere the seed touches,
By feeding on the ones that try to consume!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - மகாகவி சுப்பரமணிய பாரதி 
 Courtesy: For the Small Kavidhai - Arumuga Pradeep

Sunday, October 10, 2010

Wildlife Wee(a)k !

Some of us need an example, we are never convinced with statistics, logic, etc. We want a true story! Then, common, read this true tragic story. This will make you put down your head with shame, it did to me!
Does 'dodo' reminds you of your pet name? Does it looks funny. No,This 'dodo' is a tragedy. A flightless bird that inhabited the island of Mauritius in the Indian Ocean and lived undisturbed till the Portuguese set foot on
the island in 1505. Do you get the meaning of the above sentence, if not, you will surely understand this- The whole of dodo species was killed some 300 years ago. If "Oh, common man, who cares?" is our mentality then we are the ones next. Yes, the bird demands pay back. It is calling another plant species along with it now!

Portuguese, when they came, introduced new animals to the land(viz, dogs, pigs, etc). Almost half of the dodo population was killed by the foreign animals. The rest were hunted down by man for food. Now, after more than 300 years, when man has almost forgotten the flightless bird, erupts anew volcano.

The island was suitable only to specific kinds of trees. Such trees have a life-span of about 300 years. Now the trees are in the 'endandagered list'. If the scenario continues, there Will be no trees, hence no rain in that island. People are extremely worried. They are all dead for sure. Now, i hear you saying, "life of human at stake? this is indeed serious!"

Scientists, after serious research have arrived at a conclusion that, the extinction of dodo is the only reason for the current situation. Scientists found out the species of tree on the Mauritius that has stopped germinating for the past 300 years. As the average life span of this species is about 300 years, they would soon die out and become extinct. It was not a coincident that the tree stopped germinating 300 years ago and the Dodo became extinct 300 years ago. In fact, the dodo ate the fruit of this tree, and it was only by passing through the Dodo's digestive system that the seeds became active and could grow.

Now people are trying different methods like artificially removing the coat or using turkey bird to do the Dodo's job. Dodo did that at free of cost. will technology do? Wake up before it is too late. On the eve of wildlife week(October 1-7), let us try to understand and follow,
  1. Wildlife is critical in maintaining bio-diversity. Indirectly and directly responsible for our life to sustain.
  2. Do not introduce foreign animals as they tend to crash the whole system.
  3. Catfish, which is not indigenous species, outnumbers our fishes and is a great threat to our fishes.
  4. Even if you can afford a German shepherd, go for vaccinated Indian breed