Showing posts with label Nair Sir. Show all posts
Showing posts with label Nair Sir. Show all posts

Tuesday, April 14, 2020

நாயர் சாரே

ஞாயிறாய் இருந்த நாயர் சாரே,
எங்கள் ஞான குருவே நாயர் சாரே,
பிள்ளைப்போல் பார்த்தாய் நாயர் சாரே,
காட்டிய வழியே சென்றோம் நாயர் சாரே,
வழி எங்கும் துணைநின்றாய் நாயர் சாரே,
விழி நீரை துடைத்திட்டாய் நாயர் சாரே, 
வாழ்க்கையை கற்றுத் தந்தாய் நாயர் சாரே, 
பலர் இன்று வாழ்வதும் உன்னாலே நாயர் சாரே, 
பெற்ற பேரெல்லாம் உனதாகும் நாயர் சாரே, 
எங்களை விட்டு எங்கு சென்றாய் நாயர் சாரே, 
ஏக்கங்கள் தீரவில்லை நாயர் சாரே,
என்றாவது நீ வருவாயா நாயர் சாரே??? 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Tuesday, April 7, 2020

நாயர் சார்

சிந்திக்க கற்றுதந்தாய்
சிறகடித்துப் பறக்க சொல்லித்தந்தாய்,
எண்ணங்களே உயர்வுயென்றாய்,
கற்றதை கற்பிக்க சொன்னாய், 
கற்பித்தலும் கற்றலாகுமேன உணர்தினாய்,
வாடி நின்ற போது, வாசல் வந்தாய், 
தேடி நின்றோர்க்கு தோல்களை தந்தாய்.


- இராமகுரு ராதாகிருஷ்ணன்