Showing posts with label கிறுக்கல். Show all posts
Showing posts with label கிறுக்கல். Show all posts

Friday, May 1, 2020

நம் சார்பியல்

காத்திருந்தேன் பல மணி நேரம்,
நீ சொல்லும் சில வார்த்தைக்காக.
பார்த்திருந்தேன் பல மணி நேரம்,
நீ காட்டும் கள்ளமில்லா பாசத்திற்காக.
விழித்திருந்தேன் பல மணி நேரம்,
நீ விழி மூடி கண்ணுறங்க.
மௌனித்திருந்தேன் பல மணி நேரம்,
நீ மௌனத்தை கழைப்பாயென்று.
எதிர்பார்த்திருந்தேன் பல மணி நேரம்,
நீ வந்துவிட மாட்டாயாயென்று.
....
பல மணி நேரமும், சில நொடியானது, 
உன் நினைவுகள் மனத்திரையில் ஒளிப்பரப்பானதால். 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Tuesday, April 28, 2020

என் (கவிப்)பயணம்

காகிதத்தில் கிருகினேன்,
கவிதைகள் பல எழுதினேன்.
காகிதங்கள் கடந்துவிடும்,
கவிதைகள் நம்மோடு கலந்துவிடும்.
காதல் வந்தால் கவிதை வரும்,
கொஞ்சம் காத்திருந்தால் கவிதை பொங்கும்.
முதல் கவிதை தேர்வு தாளில்,
தொடரும் நான் வாழும் நாளில்.

ரம்யமாய் கவிதை வேண்டி,
அட்சயா பாடி ஆட அதுதொடர,
சோகமும், சோர்வும், 
பழியும், பாவமும் கடந்து
வருவேன் எழுவேன்,
பாசமும், பறிவும், 
ஊக்கமும், உண்மையும்,
தேக்கமும், தெளிவும்,
வருமா‌ வருமா என பறக்க நினைத்து,
மறத்துப்போன கவிதையாக,
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்,
என் தம்பி எனும் படைக்காக்க,
என் தன்னம்பிக்கை உயிர்பெற்று உயர,
மோலு எனும் மேலுலக தேவதை,
விண்ணிலிருந்து வந்து விதி மாற்றி,
என்னிலிருந்து எனை மாற்றினால்.

(தன்யா) தனியாய் புரிந்தது பலர் பாசம்,
பெரிதாய் தெரிந்தது பலர் தியாகம்,
பதினெட்டாம் படிக்காரன் படியளக்க,
பதினெட்டை பெற்று பழையதை பாதுகாக்க,
பதினெட்டில் கிடைத்த பக்குவ பைங்கிளி,
அமைதியாய் ஆனால் அம்முவாய்.

தொடர்கிறது கவிதை,
கரோனா கொடுத்த விடுப்பு
கற்று தரும் உலகில் பல பொறுப்பு.

-இராமகுரு ராதாகிருஷ்ணன்

Friday, April 24, 2020

மகளாய் பிறப்பாய்!!!

மகளாய் பிறப்பாய், 
என் பெண்ணே உன்னைகாண.
மகளாய் பிறப்பாய், 
உன் புன்னகையில் பசியாற.
மகளாய் பிறப்பாய், 
என் மடியில் நீ உறங்கிட. 
மகளாய் பிறப்பாய், 
உன் மழலை சொல் கேட்டிட. 
மகளாய் பிறப்பாய், 
உன்னை என் மார்பில் வளர்த்திட.
மகளாய் பிறப்பாய், 
உன் பள்ளிப்பாடம் கேட்டிட.
மகளாய் பிறப்பாய், 
என் சாதனைகளுக்கு சாட்சியாய்.
மகளாய் பிறப்பாய், 
நீ பெண்ணாய் பூத்திட.
மகளாய் பிறப்பாய், 
உன்னை மனமேடையில்  ஆசிர்வதிக்க.
மகளாய் பிறப்பாய்,
நம் மனதோடு பேசிட.
மகளாய் பிறப்பாய், 
உன் குழந்தைகளை கொஞ்சிட.
மகளாய் பிறப்பாய்,
உன்னை சாதனை மங்கையாய் காண.
மகளாய் பிறப்பாய், 
எனக்கு இரு சொட்டு கண்ணீர்விட. 
மகளாய் பிறப்பாய், 
உன் மகனாக நான் பிறக்க. 
மகளாய் பிறப்பாய் மகளே!!!! 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Tuesday, April 14, 2020

நான் இருக்கிறேன்

நான் இருக்கிறேன் 
உன்னை சுமந்து உலகை சுற்றிவர 

நான் இருக்கிறேன்
சுற்றிவரும் உலகை உனக்கு சொந்தமாக

நான் இருக்கிறேன்
சொந்தங்கள் உன்னை சோர்வுற செய்தாலும்

நான் இருக்கிறேன்
சோர்வுற்ற உன்னை சிரிப்பூட்ட எழவைக்க 

நான் இருக்கிறேன்
ஏழ நினைக்கும் உனக்கு ஏணியாய்

நான் இருக்கிறேன்
ஏணிகளை கடந்து சாதனைகள் செய்திட 

நான் இருக்கிறேன்
சாதனைகளும் சர்வ சாதாரனமென நீ உறக்கசொல்ல !!! 

நான் இருக்கிறேன்....

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

நாயர் சாரே

ஞாயிறாய் இருந்த நாயர் சாரே,
எங்கள் ஞான குருவே நாயர் சாரே,
பிள்ளைப்போல் பார்த்தாய் நாயர் சாரே,
காட்டிய வழியே சென்றோம் நாயர் சாரே,
வழி எங்கும் துணைநின்றாய் நாயர் சாரே,
விழி நீரை துடைத்திட்டாய் நாயர் சாரே, 
வாழ்க்கையை கற்றுத் தந்தாய் நாயர் சாரே, 
பலர் இன்று வாழ்வதும் உன்னாலே நாயர் சாரே, 
பெற்ற பேரெல்லாம் உனதாகும் நாயர் சாரே, 
எங்களை விட்டு எங்கு சென்றாய் நாயர் சாரே, 
ஏக்கங்கள் தீரவில்லை நாயர் சாரே,
என்றாவது நீ வருவாயா நாயர் சாரே??? 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Friday, September 14, 2018

வருகிறேன் இன்னுமொரு ஜென்மம் இருந்தால்


வருகிறேன் இன்னுமொரு ஜென்மம் இருந்தால்

நின்னுடன் அன்பு சண்டையிட

வருகிறேன் இன்னுமொரு ஜென்மம் இருந்தால்...

நின் பாச மழையில் நினைய

வருகிறேன் இன்னுமொரு ஜென்மம் இருந்தால்...

என் அன்புக்காக நீ ஏங்கிருந்தால்

வருகிறேன் இன்னுமொரு ஜென்மம் இருந்தால்...

புரியாத என்னை புரியவைக்க

வருகிறேன் இன்னுமொரு ஜென்மம் இருந்தால்...

வேகமாய் சென்ற வாழ்வை திரும்பி பார்க்க

வருகிறேன் இன்னுமொரு ஜென்மம் இருந்தால்...

உணராத தியாகத்தை உணர

வருகிறேன் இன்னுமொரு ஜென்மம் இருந்தால்...

இனி ஒரு ஜென்மம் வேண்டாம் என்றிட

- இராமகுரு ராதாகிருஷ்ணன் 

Saturday, January 11, 2014

சான் ஜோஸ்

எங்கள் பள்ளி சான் ஜோஸ்
என்று சொல்லி சந்தோஸ்(ஷம்)
பள்ளிக்கு மேல் நீ (சான் ஜோஸ்) எங்களுக்கு
பிள்ளைகளாய் நாங்கள் உங்களுக்கு
அன்பை சேவையாய் செய்திட்ட நீங்கள்
சேவையை அன்பாய் செய்ய துடிக்கும் நாங்கள்
எவ்விடம் சென்றாலும் இவ்விடமிருந்தே சென்றது
அவ்விடம் இருந்தாலும் இவ்விடத்திற்கோ மனம் துடிக்குது

கடவுளை காட்டியது நீங்கள்
கல்வி கொடுத்தது நீங்கள்
கனவை காண்பித்தது நீங்கள்

ஊட்டி வளர்த்த பிள்ளையை
ஊர் மேச்ச உளமாற வாழ்த்தும் தாயாய்

வழிகாட்டும் குருவுக்கு மேலாய்
கை பிடித்து வழிநடத்தும் தந்தையாய்

நீங்கள் தந்தது சொல்லி மாளாது

நீங்கள் தந்தது இன்றி
எங்களிடம் இருப்பது நன்றி
மட்டுமே !!

 - இராமகுரு ராதாகிருஷ்ணன்


Friday, December 20, 2013

எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

பள்ளிப் புத்தகத்தில்
பால் முகம் தெரியும் பொது
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

எந்நாளும் நன்நாளாய்
என்றும் நிலைத்திட
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

மூடிய கண்கள்
மூடி மட்டுமே இருக்க
உறக்கம் வர
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

துக்கம் துறத்தி வர
விழும் கண்ணீரை
விழியோடு துடைக்க
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

மாலை பொழுதில்
முத்தமொன்று தந்துவிட
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !
ஆதலால்
உன்னை கொஞ்சம் வேண்டும் நான் !

- இராமகுரு ராதாகிருஷ்ணன்