Wednesday, December 28, 2011

ஊட்டி !

ஊட்டி !

இயற்கை அன்னையின்
இதமான இன்னிசை ..,
குயில் பாடலாய் ஒலிக்கும்
குளிர் காற்று ..,
அரும்பும் தளிர் போல
பனிப்பூகள் பச்சை புல்லில் ..,
இதழ் விரித்து பாடும்
மலை மகளின் மணி மகுடமாய்
தோகை கொண்டு ஆடுகிறது
மேக கூட்டம்..,
வெயில் வெறும்
வெளிச்சமாய் மட்டும்..,

குளிரின் கரம் தொட்டதால்
கன்னிப்பூ வெடித்து
நிலம் நோக்கும் மலர் செண்டு ..,
"மீண்டும் ஒரு முறை தொட்டுப்பார் "
கேலி செய்கிறது
சில்லென்ற நீர் !!!
"சுவாசம்" -
மூச்சுக்காற்றாய் நிறைத்தது
நுரையீரல் மட்டுமா !
இல்லை
இதய அறைக்குள்ளும்
இன்ப வருடல்கள் !!!
இத்தனை நாள் .. நான்
காணாத காவியம் !!!
இயற்கை தீட்டிய
ஆழகு ஓவியம் ..,
அதிகாலை வெண்பனியில்
"மதி"பெருகி
அலை மகளாய்
மலை முகட்டை அணைக்கிறாள்
"அருவி "- யாய்
இரவுக்காட்சியில்
நிசப்தத்தின் இறைச்சல்மேல்
நித்திரை கொள்கிறேன் !!!
இறைவனின் படைப்பில்
இத்தனை அழகா !!!
இல்லை
இல்லவே இல்லை !!!
நட்பின் கருவறையில்
கைகோர்க்கும் போது
காணும் அத்தனையும்
"ஆழகு" தான் ..,
மீண்டும் நாங்கள்
"குழந்தைகளாய்"

 - லோகநாதன் 




இயற்கையில் ஓர் இனிய பயணம்


அலுவலக உலகத்தை
சற்று மறந்துவிட்டு
இயற்கை அன்னையின்
மடியில்
துயில் கொள்ள
சென்றோம்,
ஒரே குடும்பமாய் !
விருந்தோம்பல்
பண்பினை
எங்கே கற்று கொண்டன . இந்த செடிகள் ?
எல்லா செடிகளும்
தலை பணிந்து
இலைகளை அசைத்து
சிறு புன்னகையுடன் 

வரவேற்க !
வரவேற்பாளர்களாய் ,
வழி நெடுக
வானுயர்ந்த  மரங்கள் !
தாயின் தாலாட்டாய்
பறவைகளின் இனிய
சப்தம்
எல்லா திசைகளிலும் !
தென்றல் காற்று ,
தேகம் தழுவ
சுவாச அறை வரை
சென்று திரும்பியது ;
தூய்மையான புத்துணர்வுட்டும் ஆக்ஸிஜன் !
உலகிற்கு ஒளி தரும்
கதிரவனுக்கே கடுங்குளிரோ ?
மேக மெத்தைக்குள்
பனி போர்வைக்குள்
அப்படியோர் உறக்கம் !
மனதிற்கு  மகிழ்வாய் ,
கண்ணிற்கு குளிர்ச்சியாய்,
திரும்பும் திசையெங்கும்
வண்ண மலர்கள் !
மலர்களை தேடி ,
வண்ணத்துப் பூச்சிகளின் ஊர்வலம்!
நிலவு மகளுக்கோ
புது  விருந்தாளிகளான
நம்மை கண்ட
ஆனந்தமோ ?
இரவு முழுவதும் ,
பனி மழை பொழிய
கடுங்குளிரிலும் நெருப்பு மூட்டி ,
இதமான வெப்பத்துடன்
ஆட்டம் பாட்டமாய்
களிப்புடன் நிறைவடைந்தது
அன்றைய இரவு !
பலவித விளையாட்டுகளுடன்
மழலைகளாய் மாறினோமே!
இறுதியாய்,
மலைகளின் ராணியிடமிருந்து 
பிரியா விடை பெற்று கொண்டு
இரு நாட்களின் இனிய நினைவுகளை ,
இதய ஆல்பத்தில் அழியா புகைப்படமாய் பதித்து கொண்டு
மீண்டும் திரும்பினோம் ,
எங்கள்
இயல்பு வாழ்விற்கு !



 - பானு

Sunday, December 11, 2011

Happy Birthday Bharathi - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - மகாகவி சுப்பரமணிய பாரதி


Dec 11, 2011 - 129th Birthday of the great Indian poet Subramanya Bharathi. Bharathi had an impact on everything the National Freedom, Social reforms,Women up liftment. His influence can be seen in Indian cinema, his poems composed into songs.


My favorite and lovable among his poems are:

வெள்ளை நிறத் தொரு பூனை-எங்கள்
வீடடில் வளருது கண்டீர்.
பிள்ளைகள் பெற்றதப் பூனை-அவை
பேருக்கொரு நிறமாகும்

poem we studied in primary school.

ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

 
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.


பொய்சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.


உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா. 

These are from "பாப்பாப் பாட்டு - Paapa Paattu" which says how a child be in childhood, various animals and their qualities.

My second memory poem in 6th Grade(not sure):

ஒளி படத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்கு வாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா
         

Above this, every Monday in open assembly after flag hoisting, we sing
தாயின் மணிக்கொடி பாரீர் -- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

 As told earlier Tamil movies by veteran Directors KB and Mani's Movies have actual poems as songs and songs influenced by his poems.


தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
       செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
       பாங்கியோ டென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
       மார்பு துடிக்கு தடீ!

பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
       பாவை தெரியு தடீ!

மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே
       வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா
       வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! - இந்த வையகம்
       மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்
       நரகத் துழலுவதோ?


from "வறுமையின்  நிறம்  சிவப்பு - Varumaiyin Niram Sivapu", where Kamal Haasan(in movie)(SPB) sings this wonderful verses.



 வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
  மார்பு துடிக்கு தடீ!

  
This same lines have used in another song from Kamal Haasan and Rajini Duo Movie by KB.


நல்லதோர் வீணை செய்தேஅதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ 
சொல்லடி சிவசக்தி
எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்

வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
நிலசுமையென வாழ்ந்திட புரிகுவையோ

விசையுறு பந்தினைப் போல்
உள்ளம் வேண்டியபடி
செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
நித்தம் நவமென சுடர் தரும் உயிர்கேட்டேன்

தசையினை தீச்சுடினும்
சிவசக்தியை பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ

from the same movie "வறுமையின்  நிறம்  சிவப்பு - Varumaiyin Niram Sivapu", where Kamal Haasan sings when he is tired of searching a dream job and being honest in all ways he do things.

Though movies were influenced by this  great men's work. Even before movies could, the poems wrote when facebook tags , shares, twitter tweets, Google buzzing weren't there reached people.




One such famous poem is 


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதித்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே.
இச்சகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

This poem says about the courage and state of being without fear when India was under British. 

"Even when the whole world is against us, 
No fear or no traces of fear.
Even people break us thinking we are least important
No fear or no traces of fear.
Though we live through eating what we get by begging
No fear or no traces of fear.
Though we lost all things we desired for
No fear or no traces of fear."

Tamilnadu, formerly know as Madras Presidency , in the below poem he would pin pointed out the versatility of செந்தமிழ் நாடு i.e., தமிழ் நாடு



செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே -            (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு            (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு.            (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு - செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு            (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு.            (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.            (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு.            (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக - மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன் கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.            (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யிடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.            (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.            (செந்தமிழ்)

During school days, I knew செல்லமா(Chellama) is Bharthi's wife, I wonder who is this கண்ணம்மா(Kannamma). கண்ணம்மா , is Lord Krishna(known as Kannan), Bharathi visualized Lord Kannan Child, Mother,Lover.




My two famous poem of கண்ணம்மா as child and கண்ணம்மா as lover.


Child - குழந்தை :

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
       செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
       ஏற்றம் புரிய வந்தாய்!       
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
       பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
       ஆடி வருந்தேனே!   

ஓடி வருகையில் - கண்ணம்மா
       உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
       ஆவி தழுவு தடீ!   

உச்சி தனை முகந்தால் - கருவம்
       ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
       மேனி சிலிர்க்கு தடீ!   

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
       கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
       உன்மத்த மாகு தடீ!   

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
       சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
       நெஞ்சம் பதைக்கு தடீ!   

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
       உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
       என்னுயிர் நின்ன தன்றோ?   

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
       துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
       மூர்க்கந் தவிர்த்திடு வாய்.   

இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்
       ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
       ஆகுமோர் தெய்வ முண்டோ?   

மார்பில் அணிவதற்கே -உன்னைப்போல்
       வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப் போல்
       செல்வம் பிறிது முண்டோ?       



 Lover -  காதலி              

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நக்ஷத் திரங்க ளடீ!                                 

சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ! - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.              

சாத்திரம் பேசு கிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ! - இதுபார்,
கன்னத்து முத்த மொன்று!                   

Last but not least, Bharathi know for his multi-linguistic person, expresses his love towards Tamil.

Tamil - தமிழ்
          

Bharathi
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல,
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!


பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

மகாகவி பாரதிக்கு சின்னதொரு பிறந்த நாள் பரிசு! by Arumuga Pradeep.
உள் ளம் கணன்றும் லட்ச்சியம்,
ஓங்கி வளரட்டும்...
வெடித்து சிதறட்டும்...
கனல்த் துளி தெரித்த இடமெல்லாம்,
... பற்றட்டும்....
பற்றிய படியே பரவட்டும்...
அனைக்க துடிப்பவையயும் தனதாக்கியபடி!
Translation: 
A tribute to the greatest poet, patriot and reformer- Mahakavi Barathi!
Let the dream within me ignite,
Let the ignited fire mass explode open,
Let flames scatter....dream seeds be dispersed,
Let it catch fire everywhere the seed touches,
By feeding on the ones that try to consume!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - மகாகவி சுப்பரமணிய பாரதி 
 Courtesy: For the Small Kavidhai - Arumuga Pradeep

Saturday, December 10, 2011

Attention Please

            Once first year students of MBBS were attending their 1st anatomy class.They all gathered around the surgery table with a real dead dog. The Professor started class by telling two important qualities as a Doctor.First is that NEVER BE DISGUSTED FOR ANYTHING ABOUT BODY , e.g. He inserted his finger in dog's mouth & on drawing back tasted it in his own mouth, then he said them to do the same. The students hesitated for several minutes. But eventually everyone inserted their fingers in dog's mouth & then tasted it.

             When everyone finished, the Professor looked at them and said: The most important second quality is OBSERVATION , I inserted my Middle finger but tasted the Index finger, now learn to pay attention.

Moral:
Life is tough but it’s a lot tougher when you are not paying attention !!!!!

Friday, December 9, 2011

கனவு !



எதிர்காலம்..,
நிகழ்காலம் நிஜமானவர்களின்
ஏழாம் அறிவின்  எழுச்சி!!!

" அ...ஆ.. இ.."
பாடம் படிக்கிறேன்... நான் !!!!
கண்களில் ஏக்கம்
கனவுகளின் துரத்தல்
சலனமில்லா ஒரு இரைச்சல்
கையில் உலகம்
உணர்வுகளின் நெருக்கடி  
வாழ்க்கையின் எழுதுகோல்
இசையின்   அரவணைப்பு
சுவாசத்திலும் சுகம்
தாயின் முதல் முத்தம்
தவிப்புகளின் தாரக மந்திரம்
......................................,
" தம்பி  சீக்கிரம் கிளம்பு
வேலைக்கு time  ஆயிடுச்சு "ஆச்சர்யத்தில் கண் விழித்தேன்
அம்மாவின் அழகிய அறிவிப்பு !!!
கண்களின் பிம்பத்தில் 
(என்) ஓலைக்குடிசையின் உயிரோட்டம்....

ஆம்..........
"கல்வி"
எனக்கு ஓர் பகல் கனவு ....
எட்டாத ஓர் உணர்வு....

இருளின் நாடகத்தில்
நினைவுகளும் கவிஞனாக்கிவிட்டது
"கல்வி" எனும் எழுதுகோல் கையில் ...,

" இதோ வந்துட்டேன் அம்மா !!!"
அனிச்சைசெயலாய் அத்தனையும்..,

இரவுகளுக்காக காத்திருக்கிறேன்
இன்று
அடுத்த பக்கத்தில் "அப்துல் கலாம்"..,

கானல் நீராய் என் "கல்வி"
மூளையின் முதுகெலும்பில்
முளைத்திட்ட ஓர் விதை !!!

என்ன செய்ய
படிக்கும் வயதில்
நான்
பால் வியாபாரி !!!
நடக்கிறேன்
வழக்கமான பயணம்

கனக்கிறது..,
கையில் ஏற்றிய பாரமல்ல
நினைவுக்கூட்டில்
என் கனவுப் புத்தகங்கள் !!!

"வருகிறேன் அம்மா"
வாடகை இல்லாதது
கரு(அ)வறை மட்டும்தானோ !!!
ஆழ்ந்த யோசனையில்
இன்றைய நாள்...

கை கொடுக்க வேண்டாம்
'கல்வி' கொடுங்கள் ...,
சாலையில் சந்தித்த மக்களிடம்
என் மனம் கேட்ட யாசகம் !!!

நிஜமாக்குமா !!! நிஜமாகுமா !!!
என்  "கனவு"


" அம்மா பால் ............................... "

- லோகநாதன்


 மரங்கள் நிறைந்த காடு !
மழைக்குபஞ்சமில்லா ஞாலம் !
மனித நேயமுள்ள மனம் !
சிசுக்கொலை இல்லா கிராமம்!
மதுபானக் கடை இல்லா தெருக்கள் !
குழந்தை தொழிலாளர் இல்ல சமூகம்!
விபத்தில்லா சாலைகள் !
வீதியெங்கும் மரங்கள் !
குப்பையில்லா வீதிகள் !
அனைவருக்கும் கல்வி !
சாதிகள் இல்லா சமூகம் !
யாசகர்கள் இல்லா கோயில்கள் !
புகையில்லா வாகனம் !
தூய்மையான காற்று !
வன்முறை இல்லா உலகம் !
லஞ்சமில்லா வாழ்கை !
அனாதைகளே இல்லா அகிலம் !
கடனில்லா இந்தியா!
சிட்டுக்  குருவிகளின் சப்தம் !
இவை எல்லாம் ,
        இனி  கனவில் மட்டும் தானா ?
         நிஜமாகுமா ?
         மாற்றம் தேடியே ,
                                         ஓர்  பயணம் !!!

- பானு
 

Tuesday, December 6, 2011

Sunday, December 4, 2011

காதல் காயம்

மனதில்,
வலி இருந்தாலும் 
விழிகளில் 
காட்ட மறுக்கும், 
காதல் !