Thursday, January 16, 2014

வருவேன் எழுவேன் !

வழியென்று குழிக்குள் விழுந்தேன்
பாவமென்று சிலரும்
பரிதாபமென்று சிலரும்
குருடனென்று சிலரும்
அறிவிழந்தவனென்று சிலரும் கூற
கைகொடுத்து காப்பாற்ற மனமில்லை எவர்க்கும் !!!

குழிகள் பலவுண்டு
வழுக்கிவிழ வழிகளுண்டு
வார்தைகள்விழ வாய்களுண்டு

உணர்ந்தேன் இன்று,
தோள்கொடுக்க தோழனுண்டு
எழுந்துவர மனமுமுண்டு

விழுந்தவனுக்குதான் எழுவதன் கடினம் புரியும்
நீங்களும் விழலாம் , நான் இருக்கிறேன்
கைகொடுக்க !

வருவேன் எழுவேன் !

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment