Wednesday, July 8, 2020

நீயும் நானும்

கண்ணில் நீர் ஏனோ? 
காரணம் தான் என்னவோ!?

நெஞ்சில் நீ இருப்பதால்,
நினைவலைகள் தான் இழுக்குமோ?

பாசம் நான் வைத்ததால்,
பாவமாக நிற்கிறேன்.

அன்பு நாம் கொள்ள,
அறியாதோர் என் செய்வார்? 

தங்கையாய் தாயாய் தோன்றினாய்,
தந்தைப்போல் தந்தப்பாசம் தெரியலையோ?

அண்ணா என்றழைத்த குரல்,
அமைதியாக அழுகுதம்மா!!!

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment