Friday, May 1, 2020

நம் சார்பியல்

காத்திருந்தேன் பல மணி நேரம்,
நீ சொல்லும் சில வார்த்தைக்காக.
பார்த்திருந்தேன் பல மணி நேரம்,
நீ காட்டும் கள்ளமில்லா பாசத்திற்காக.
விழித்திருந்தேன் பல மணி நேரம்,
நீ விழி மூடி கண்ணுறங்க.
மௌனித்திருந்தேன் பல மணி நேரம்,
நீ மௌனத்தை கழைப்பாயென்று.
எதிர்பார்த்திருந்தேன் பல மணி நேரம்,
நீ வந்துவிட மாட்டாயாயென்று.
....
பல மணி நேரமும், சில நொடியானது, 
உன் நினைவுகள் மனத்திரையில் ஒளிப்பரப்பானதால். 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment