Saturday, October 4, 2014

அருட்செல்வர் அய்யா


உங்களை கண்டது இரு முறை
உங்கள் தாக்கமோ வாழும்வரை !

காந்தியம் பற்றி கேட்டதுண்டு
உங்களை கண்டு உணர்ந்ததுண்டு

காந்தி ஜெயந்தி அன்று எங்களை பிரிந்து
காந்தி உடன் இணைதீர்கள்

கொங்கு மண்டலத்தில் நீங்கள் மகா-சக்தி
உங்கள் வாழ்வு எங்களுக்கு தரும் மகா-சக்தி

பொருட்செல்வர் நீங்கள் - அதை கொடுத்ததால்
அருட்செல்வர் நீங்கள் !

நீங்கள் கொடுத்தது பொருள் மட்டுமா?
கல்வி, அது தரும் தொழில்
அரசியல் அதற்கு மேல் ஆன்மிகம்

உம்மை எழுத வயதுமில்லை வார்த்தையுமில்லை
உம் புகழ் வாழிய பல்லாண்டு

- இராமகுரு ராதாகிருஷ்ணன்



No comments:

Post a Comment