Thursday, December 12, 2013

கிறுக்கல் !

முயற்சி :

முயல்வது மட்டும் முயற்சியல்ல 
முடியும் வரை முயல்வதே முயற்சி !

நண்பன் :

என் கண்ணுக்குள் என் நண்பன் ,
என் சிரிப்பின் சந்தம் என் நண்பன் ,
என் வெற்றியின் வலிமை என் நண்பன் ,
என் தோல்வியில் துணை என் நண்பன் ,
என் கனவுக்கு கண் என் நண்பன்,
.............
உன்னை போல் நண்பன் - உலகில் 
இனி உண்டோ ?
பிறர் வாழ பிரிந்தோம்
நீ வாழ துடித்தேன்
நான் வாழ தேய்ந்தாய்
நாம் வாழ்க நலமாக !!!!


கடல் :

உலகில் முக்கால் நீ என்றே 
என் முக்கண்ணன் உன்னில் தோன்றினான் 
உன் காதல் சந்திரன் 
காணவந்தால் 
காற்றோடு (காதல்) அலை வீசும் நீதான் 
உனை மறந்து ஒருநாள் போனால் 
ஆவேசத்தோடு உள்வாங்குவாய் 
இந்த சாபம் உனக்கு 
எம் தமிழ்ச் சங்கங்களை விழுங்கியதாலோ !?!?


- இராமகுரு

No comments:

Post a Comment